ஹதீஸ்கள்
#2854
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூக(த்)தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (ஹுதைபியா ஆண்டில் மக்காவுக்குப்) புறப்பட்டேன். (வழியில்) என் தோழர்கள் சிலருடன் நான் பின்தங்கிவிட்டேன். அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்; நான் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. என் தோழர்கள் நான் பார்ப்பதற்கு முன்னால் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். அதைப் பார்த்தபொழுது அதை நானாகப் பார்க்கட்டும் என்று விட்டுவிட்டார்கள். (நான் அதைப் பார்த்தவுடன்) ‘அல்—ராதா’ எனப்படும் எனது குதிரையின் மீது ஏறிக்கொண்டு என் தோழர்களிடம் எனது சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்) அதை (எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். ஆகவே, நான் அதை எடுத்து (அந்தக் காட்டுக் கழுதையைத்) தாக்கி, அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன்; பிறகு (அதை அறுத்து சமைத்து) நான் உண்டேன்; அவர்களும் உண்டார்கள். பிறகு (அதை உண்டதற் காக) வருந்தினார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதிலிருந்து ஏதேனும் உங்களிடம் எஞ்சி இருக்கிறதா?” என்று கேட்டார்கள். ‘‘அதன் கால் எங்களிடம் இருக்கிறது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எடுத்து உண் டார்கள்.31 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2854
- Book Index
- 70
Grades
- -