ஹதீஸ்கள்
#2847
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது; (உளவுப் பணிக்காக) நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள்.லி ‘‘அது அகழ்ப் போரின்போது என்றே நினைக்கி றேன்” என அறிவிப்பாளர் ஸதகா பின் அல்ஃபள்ல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். லி ஸுபைர் (ரலி) அவர்கள் (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத் தார்கள்; அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்களே பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் நிச்சயம் உண்டு. என் (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் பின் அல்அவ்வாம் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2847
- Book Index
- 63
Grades
- -