ஹதீஸ்கள்
#2846
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ் (அஹ்ஸாப்) போர் நாளில், எதிரிகளின் செய்தியை உளவறிந்து என்னிடம் கொண்டுவருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘நான் (உளவறிந்து வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘எதிரிகளின் செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்?” என்று கேட்க, ஸுபைர் (ரலி) அவர்களே, யிநான்’ என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2846
- Book Index
- 62
Grades
- -