ஹதீஸ்கள்
#2845
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் யமாமா போரை நினைவு கூர்ந்து கூறியதாவது:30 (என் தந்தை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக்கொண்டிருந்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (அறப்போருக்கு) ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘இதோ! இப்போது வருகின் றேன்; என் சகோதரர் மகனே!” என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கி விட்டார்கள். பிறகு வந்து (அறப்போர் வீரர்களுடன்) உட்கார்ந்துவிட்டார்கள். லிஅப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள்லி (மக்கள் தோற்றுப் பின் வாங்குவதைக் கண்ட) ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘எமக்கு விலகி வழிவிடுங்கள். நாம் எதிரிகளுடன் போரிடுவோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் (நீங்கள் பின்வாங்கியோட, அவர்கள் உங்களை விரட்டி வரும் இந்த குணம்) மிக மோச மானது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2845
- Book Index
- 61
Grades
- -