ஹதீஸ்கள்
#2839
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஓர் அறப்போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘‘(நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் மதீனாவில் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயையும் பள்ளத்தாக்கையும் கடந்து சென்றாலும், அவர்களும் நம்முடன் அதில் இல்லாமல் இருப்பதில்லை. தகுந்த காரணமே (அறப்போரில் கலந்துகொள்ள விடாமல்) அவர்களைத் தடுத்துவிட்டது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. முதலாவது தொடரே மிகவும சரியானது ஆகும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2839
- Book Index
- 55
Grades
- -