ஹதீஸ்கள்
#2822
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அம்ர் பின் மைமூன் அல் அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆசிரியர் சிறுவர்களுக்கு எழுத்தைக் கற்பிப்பதைப் போன்று, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக்கொடுத்துவந்தார்கள்; மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின்னால் இவற்றைச் சொல்லி பாதுகாப்புக் கோரிவந்தார்கள் என்றும் கூறுவார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் —ýப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி. (பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; தள்ளாத வயதில் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனை’லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். இது உண்மையானதுதான் என அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، حدثنا عبد الملك بن عمير، سمعت عمرو بن ميمون الاودي، قال كان سعد يعلم بنيه هولاء الكلمات كما يعلم المعلم الغلمان الكتابة، ويقول ان رسول الله صلى الله عليه وسلم كان يتعوذ منهن دبر الصلاة " اللهم اني اعوذ بك من الجبن، واعوذ بك ان ارد الى ارذل العمر، واعوذ بك من فتنة الدنيا، واعوذ بك من عذاب القبر ". فحدثت به مصعبا فصدقه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2822
- Book Index
- 38
Grades
- -
