ஹதீஸ்கள்
#2822
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அம்ர் பின் மைமூன் அல் அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆசிரியர் சிறுவர்களுக்கு எழுத்தைக் கற்பிப்பதைப் போன்று, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக்கொடுத்துவந்தார்கள்; மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின்னால் இவற்றைச் சொல்லி பாதுகாப்புக் கோரிவந்தார்கள் என்றும் கூறுவார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் —ýப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி. (பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; தள்ளாத வயதில் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனை’லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். இது உண்மையானதுதான் என அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2822
- Book Index
- 38
Grades
- -