ஹதீஸ்கள்
#2821
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்றுகொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்துகொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; கருவேல முள்மரம்வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் மேல் துண்டு முள்மரத்தில் சிக்கிக்கொண்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, ‘‘என் மேல்துண்டை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள் மரங்களின் எண்ணிக்கையில் கால்நடைகள் இருந்தாலும்கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய்ய னாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2821
- Book Index
- 37
Grades
- -