ஹதீஸ்கள்
#2819
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நபி) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள் (ஒருமுறை), ‘‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு லிஅல்லது தொண்ணூற்றொன்பதுலி துணைவியரிடமும் சென்று (உடலுறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ் வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்” என்று கூறினார்கள். அவர்களுடைய தோழர் ஒருவர், (அவர்கள் மறந்திருக்கலாம் என்று கருதி) ‘அல்லாஹ் நாடினால்’ (இன்ஷா அல்லாஹ்) என்று சொல்லுங்கள் என்றார். சுலைமான் (அலை) அவர்கள் யிஇன்ஷா அல்லாஹ்’ என்று (தம் வாயால்) கூறாமலிருந்துவிட்டார்கள். ஆகவே, (அவர்களின் துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அவரும் ஒரு புஜமுடைய பாதி மனிதரைத்தான் பெற்றெடுத்தார். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! அவர், ‘அல்லாஹ் நாடினால்’ என்று (தம் வாயாலும்) கூறியிருந்தால், (அந்த நூறு மனைவியரும் கர்ப்பமுற்றுப் பிள்ளைகள் பெற, அப்பிள்ளைகள்) அனைவருமே இறைவழியில் அறப் போர் புரிகின்ற வீரர்களாய் ஆகியிருப் பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وقال الليث حدثني جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هرمز، قال سمعت ابا هريرة رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال " قال سليمان بن داود عليهما السلام لاطوفن الليلة على ماية امراة او تسع وتسعين كلهن ياتي بفارس يجاهد في سبيل الله، فقال له صاحبه ان شاء الله. فلم يقل ان شاء الله. فلم يحمل منهن الا امراة واحدة، جاءت بشق رجل، والذي نفس محمد بيده، لو قال ان شاء الله، لجاهدوا في سبيل الله فرسانا اجمعون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2819
- Book Index
- 35
Grades
- -
