ஹதீஸ்கள்
#2808
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(முதலில்) நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, பிறகு போர் புரிவீராக!” என்று கூறினார்கள். அவ்வாறே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பிறகு (இறைவழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் குறைவாக நற்செயல் புரிந்தார்; நிறைவாக நற்பலன் வழங்கப்பெற்றார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2808
- Book Index
- 24
Grades
- -