ஹதீஸ்கள்
#2797
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இறைநம்பிக்கை யாளர்களில் சிலரை ஏற்றிச்செல்ல எனக்கு வாகனமும் கிடைக்கவில்லை; அவர்கள் என்னைவிட்டுப் பின்தங்கிவிடுவது அவர்களின் மனதுக்கு மகிழ்ச்சியும் அளிக் காது என்பது (மட்டும்) இல்லையாயின், இறைவழியில் (போருக்குப்) புறப்படும் எந்தச் சிறு படையுடனும் நான் செல்லாமல் (ஊரில்) இருக்கமாட்டேன்8. என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ் வின் பாதையில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.9 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني سعيد بن المسيب، ان ابا هريرة رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " والذي نفسي بيده لولا ان رجالا من المومنين لا تطيب انفسهم ان يتخلفوا عني، ولا اجد ما احملهم عليه، ما تخلفت عن سرية تغزو في سبيل الله، والذي نفسي بيده لوددت اني اقتل في سبيل الله ثم احيا، ثم اقتل ثم احيا، ثم اقتل ثم احيا، ثم اقتل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2797
- Book Index
- 15
Grades
- -
