ஹதீஸ்கள்
#2780
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிபனூ சஹ்ம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் தமீமுத் தாரீ, அதீ பின் பத்தா ஆகியோருடன் பயணம் புறப்பட்டார்.30 பனூ சஹ்ம் குலத்தைச் சேர்ந்த அவர், ஒரு முஸ்லிம்கூட இல்லாத ஒரு பூமியில் இறந்துவிட்டார். தமீமுத் தாரீயும் அதீயும் அவர் விட்டுச்சென்ற (அவருடைய) சொத்துக்களை எடுத்துக்கொண்டு வந்த போது (அவற்றில்) தங்க வேலைப்பாடு செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் காணவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் (தாம் நிரபராதிகள் என்று) சத்தியம் செய்யும்படி கூறினார்கள். பிறகு அந்தப் பாத்திரம் மக்காவில் (சிலரிடம்) காணப் பட்டது. அவர்கள், ‘‘நாங்கள் இதை தமீமிடமிருந்தும் அதீயிடமிருந்தும் வாங்கினோம்” என்று கூறினர். அப்போது (இறந்துபோன) சஹ்ம் குலத்தாரின் (நெருங்கிய) உறவினர்களில் இருவர் எழுந்து சத்தியம் செய்து, ‘‘எங்கள் சாட்சியம் அவர்கள் இருவரின் சாட்சியத்தைவிட அதிகத் தகுதி வாய்ந்ததாகும்; அந்தப் பாத்திரம் எங்கள் தோழருடையதே” என்று கூறினர். அவர்கள் தொடர்பாகவே இந்த வசனங்கள் (5:106லி108) அருளப்பெற்றன. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2780
- Book Index
- 43
Grades
- -