ஹதீஸ்கள்
#2778
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்ட போது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து) பின்வருமாறு பேசினார்கள்: அல்லாஹ்வை முன்வைத்து உங்களைக் கேட்கிறேன். நான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தவிர வேறுயாரிடமும் கேட்கவில்லை. ‘‘யார் யிரூமா’ எனும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து)விடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கி) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளு தவி செய்து) தயார்படுத்துகிறாரோ அவருக் குச் சொர்க்கம் கிடைக்கும்” என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக் குத் தெரியாதா? என்று கேட்டார்கள். அவர்கள் கூறியதை நபித்தோழர்கள் உண்மையென ஏற்றுக்கொண்டனர். உமர் (ரலி) அவர்கள் வக்ஃப் செய்த போது, ‘‘இதை நிர்வாகம் செய்பவர் இதிலி ருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை” என்று குறிப்பிட்டார்கள். வக்ஃப் செய்த வரேகூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகிகளாக இருக்கலாம். ஆக, (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு. அத்தியாயம் :
وقال عبدان اخبرني ابي، عن شعبة، عن ابي اسحاق، عن ابي عبد الرحمن، ان عثمان رضى الله عنه حيث حوصر اشرف عليهم وقال انشدكم ولا انشد الا اصحاب النبي صلى الله عليه وسلم، الستم تعلمون ان رسول الله صلى الله عليه وسلم قال " من حفر رومة فله الجنة ". فحفرتها، الستم تعلمون انه قال " من جهز جيش العسرة فله الجنة ". فجهزتهم. قال فصدقوه بما قال. وقال عمر في وقفه لا جناح على من وليه ان ياكل. وقد يليه الواقف وغيره فهو واسع لكل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2778
- Book Index
- 41
Grades
- -
