ஹதீஸ்கள்
#2775
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) அனுப்பிவைத்தார்கள். அந்தக் குதிரையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காக (சந்தையில்) நிறுத்திவைத்திருப்பதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்தக் குதிரையைத் தாமே வாங்கிக்கொள்ள (அனுமதி) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதை நீங்கள் வாங்க வேண்டாம்; கொடுத்த தர்மத்தை ஒருபோதும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டாம்” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، حدثنا عبيد الله، قال حدثني نافع، عن ابن عمر رضى الله عنهما ان عمر، حمل على فرس له في سبيل الله اعطاها رسول الله صلى الله عليه وسلم ليحمل عليها رجلا، فاخبر عمر انه قد وقفها يبيعها، فسال رسول الله صلى الله عليه وسلم ان يبتاعها فقال " لا تبتعها، ولا ترجعن في صدقتك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2775
- Book Index
- 38
Grades
- -
