ஹதீஸ்கள்
#2769
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா அன்சாரிகளிலேயே நிறையப் பேரீச்சந் தோட்டங்களைச் சொத்துகளாகப் பெற்றிருந் தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரே அமைந்திருந்த யிபைருஹா’ தோட்டம்தான் அவருடைய சொத்துக்களிலேயே அவருக்கு மிகவும் விருப்பமான தாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான) தண்ணீரைப் பருகுவார்கள். ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்) திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்துவிட முடியாது’ என்று அல்லாஹ் கூறுகின்றான். என் சொத்துகளிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது யிபைருஹா’ தான். அதை அல்லாஹ்வுக்காக நான் தர்மம் செய்துவிடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஆகவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகின்ற இனத்தில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நல்லது! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வமாகிவிட்டதே! அல்லது அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! லிஇப்படி அறிவிப்பாளர் இப்னு மஸ்லமா (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் கூறியுள்ளார்லி நீர் கூறியதை நான் கேட்டேன். அதை (உம்முடைய) நெருங்கிய உறவினர்களுக்கிடையே நீர் பங்கிட்டுவிடுவதையே நான் (உசிதமானதாகக்) கருதுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே நான் செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, தம் நெருங்கிய உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்குமிடையே அதைப் பங்கிட்டு விட்டார்கள்.25 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. பிந்திய மூன்று அறிவிப்புகளிலும் யிநன்மை கிடைத்துவிட்ட’ என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2769
- Book Index
- 32
Grades
- -