ஹதீஸ்கள்
#2768
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள்24 என் கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத் துச் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள். ஆகவே, நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பயணத் திலும் உள்ளூரிலும் பணிவிடைகள் செய்துவந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ‘‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ‘‘ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?” என்றோ என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2768
- Book Index
- 31
Grades
- -