ஹதீஸ்கள்
#2767
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் எவரேனும் தம்மைப் பொறுப்பாளராக நியமித்(து இறுதி விருப்பம் தெரிவித்)தால் அதை ஒருபோதும் மறுத்ததில்லை” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஓர் அநாதையின் செல்வம் தொடர்பாக இப்னு சீரீன் (ரஹ்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானது எதுவெனில், அவனுடைய ஆலோசகர்களும் (நலம் நாடுபவர்களும்) காப்பாளர்களும் ஒன்று கூடி அவனுக்கு நன்மை எது என்று முடிவெடுப்பதேயாகும். தாவூஸ் (ரஹ்) அவர்களிடம் அநாதை களின் பிரச்சினைகளில் ஒன்றைக் குறித்துக் கேட்கப்பட்டால், ‘‘நன்மை செய்பவர் யார், தீமை செய்பவர் யார் என்பதை அல்லாஹ் அறிவான்” (2:220) எனும் இறைவசனத்தை ஓதுவார்கள். அநாதைகளில் சிறியவர், பெரியவர் ஆகியோர் தொடர்பாக அதாஉ (ரஹ்) அவர்கள், ‘‘ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப அவர்களின் பாகத்திலிருந்து காப்பாளர் செலவு செய்வார்” என்று கூறினார்கள்.23 அத்தியாயம் :
وقال لنا سليمان حدثنا حماد، عن ايوب، عن نافع، قال ما رد ابن عمر على احد وصية. وكان ابن سيرين احب الاشياء اليه في مال اليتيم ان يجتمع اليه نصحاوه واولياوه فينظروا الذي هو خير له. وكان طاوس اذا سيل عن شىء من امر اليتامى قرا {والله يعلم المفسد من المصلح}. وقال عطاء في يتامى الصغير والكبير ينفق الولي على كل انسان بقدره من حصته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2767
- Book Index
- 30
Grades
- -
