ஹதீஸ்கள்
#2752
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அதை (உமது தோட்டத்தை) உம்முடைய உறவினர்களிடையே பங்கிட்டுக் கொடுத்துவிடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா(ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, தம் (நெருங்கிய) உறவினர்களிடையேயும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களிடையேயும் பங்கிட்டுவிட்டார்கள். ‘‘ ‘(நபியே!) நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!› (26:214) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், யிபனூ ஃபிஹ்ர் குடும்பத்தாரே! பனூ அதீ குடும்பத்தாரே!› என்று குறைஷிக் குலத்தாரின் பெரும் பெரும் கிளைக் குடும்பத்தாரை அழைக்க லானார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘இந்த இறைவசனம் (26:214) அருளப் பட்டபோது நபி (ஸல்) அவர்கள், யிகுறைஷிக் குலத்தாரே!› என்று அழைத்து, (இஸ்லாமியச் செய்தியை எடுத்துரைத்து) எச்சரித்தார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، انه سمع انسا رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لابي طلحة " ارى ان تجعلها في الاقربين ". قال ابو طلحة افعل يا رسول الله. فقسمها ابو طلحة في اقاربه وبني عمه. وقال ابن عباس لما نزلت {وانذر عشيرتك الاقربين} جعل النبي صلى الله عليه وسلم ينادي " يا بني فهر، يا بني عدي ". لبطون قريش. وقال ابو هريرة لما نزلت {وانذر عشيرتك الاقربين} قال النبي صلى الله عليه وسلم " يا معشر قريش
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2752
- Book Index
- 15
Grades
- -
