ஹதீஸ்கள்
#2751
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப் பாளரே. அவரவர் தத்தமது பொறுப் பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக் கப்படுவார். ஆண், தன் வீட்டார் விஷயத் தில் பொறுப்பாளியாவான். அவன் தன் பொறுப்பிலுள்ள வீட்டாரைக் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தன் பொறுப்பிலுள்ள (வீட்டு) விவகாரங்கள் குறித்து விசாரிக் கப்படுவாள். பணியாள் தன் உரிமை யாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்பிலுள்ள செல்வம் குறித்து விசாரிக்கப்படுவான். மேலும், ‘‘ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளி யாவான்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே நான் எண்ணுகிறேன். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.14 அத்தியாயம் :
حدثنا بشر بن محمد السختياني، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، قال اخبرني سالم، عن ابن عمر رضى الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " كلكم راع ومسيول عن رعيته، والامام راع ومسيول عن رعيته، والرجل راع في اهله ومسيول عن رعيته، والمراة في بيت زوجها راعية ومسيولة عن رعيتها، والخادم في مال سيده راع ومسيول عن رعيته ". قال وحسبت ان قد قال " والرجل راع في مال ابيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2751
- Book Index
- 14
Grades
- -
