ஹதீஸ்கள்
#2746
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர் ஒருவர் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கி விட்டார். அச்சிறுமியிடம், ‘‘உன்னை இப்படிச் செய்தது யார்? இன்னாரா? இன்னாரா?” என்று ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கேட்கப்பட்டது. இறுதியில், அந்த யூதருடைய பெயர் சொல்லப்பட்ட வுடன் (‘அவர்தான் இப்படிச் செய்தார்’ என்று) அச்சிறுமி தன் தலையால் சைகை செய்தாள். உடனே அந்த யூதர் கொண்டுவரப் பட்டார். அவர் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை தொடர்ந்து விசாரிக்கப் பட்டார். அவர் ஒப்புக்கொண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் அவரது தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது தலை நசுக்கப் பட்டது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2746
- Book Index
- 9
Grades
- -