ஹதீஸ்கள்
#2744
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறுதி ஹஜ்ஜின்போது மக்காவில்) நான் நோயுற்றுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கால்சுவடுகளின் வழியே என்னைத் திருப்பியனுப்பிவிடாமல் (புலம்பெயர்ந்த மண்ணிலேயே இறப்பு ஏற்படாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்” என்று கூறினார்கள். ‘‘நான் இறுதி விருப்பம் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பாதி அதிகம்தான்” என்று கூறினார்கள். நான் ‘‘அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம்தான். அல்லது பெரியது தான்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் மூன்றிலொரு பங்கில் இறுதி விருப்பம் தெரிவிக்கலானார்கள். அது அவர்களுக்குச் செல்லும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2744
- Book Index
- 7
Grades
- -