ஹதீஸ்கள்
#2741
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் மக்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமக்குப்பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ (ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள் (என்று கேள்விப்படுகிறோமே)” என்று சொன் னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு யிவஸிய்யத்’ செய்தார்கள்? (நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது) நான்தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டுவரும்படி கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதைக்கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2741
- Book Index
- 4
Grades
- -