ஹதீஸ்கள்
#2740
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் இறுதி விருப்பம் தெரிவித்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அப்படி யென்றால் மக்கள்மீது இறுதி விருப்பம் தெரிவிப்பது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள் ‘‘ என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، حدثنا مالك، حدثنا طلحة بن مصرف، قال سالت عبد الله بن ابي اوفى رضى الله عنهما هل كان النبي صلى الله عليه وسلم اوصى فقال لا. فقلت كيف كتب على الناس الوصية او امروا بالوصية قال اوصى بكتاب الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2740
- Book Index
- 3
Grades
- -
