ஹதீஸ்கள்
#2730
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர்வாசிகள் (யூதர்கள்) என் கை மூட்டுகளைப் பிசகச் செய்துவிட்டபோது என் தந்தை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று உரையாற்றினார்கள். அவ்வுரையில், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் யூதர்களிடம் அவர்களின் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அப்போது, ‘அல்லாஹ் உங்களை இங்கு வசிக்கச் செய்யும்வரை நாம் உங்களை வசிக்கவிடுவோம்’ என்று கூறினார்கள். (என் மகன்) அப்துல்லாஹ் பின் உமர் அங்கேயிருந்த தனது சொத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார். அவர் அன்றிரவு தாக்கப்பட்டார். அதனால் அவருடைய இரு கைகளின் மூட்டுகளும் இரு கால்களின் மூட்டுகளும் பிசகிவிட்டன. அங்கு அவர்களைத் தவிர வேறு பகைவர்கள் எவரும் நமக்கு இல்லை. அவர்கள் நமக்குப் பகைவர்களும் நம் சந்தேகத்திற்குரியவர்களும் ஆவர். அவர்களை நாடு கடத்திவிடுவதே உசிதமென்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் (யூதர்களை) நாடு கடத்துவதென்று இறுதி முடிவெடுத்து விட்டபோது, (யூதர்களின் தலைவனான) அபுல்ஹுகைக் உடைய மகன்களில் ஒருவர் வந்து, ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களை முஹம்மத் (ஸல்) அவர்கள் (கைபரிலேயே) வசிக்கச் செய்து, எங்கள் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்த மும் செய்துகொண்டு, அதை (நாங்கள் பேணி வந்தால் அங்கேயே தொடர்ந்து வசிக்கலாம் என்று) நிபந்தனையிட்டிருக்க, நீங்கள் எங்களை (அங்கிருந்து) வெளியேற் றுகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘கைபரி லிருந்து நீ வெளியேற்றப்பட்டு, (நீண்ட கால்களும்) சகிப்புத் தன்மை(யும்) கொண்ட உனது ஒட்டகம் உன்னைச் சுமந்துகொண்டு இரவுக்குப்பின் இரவாக நடந்துசென்று கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட் டால் உனக்கு எப்படி இருக்கும்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் மறந்துவிட்டேன் என நினைக்கிறீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அது அபுல்காசிம் (முஹம்மத் லி ஸல்) அவர்கள் விளையாட் டாகக் கூறியதாகும்” என்று சொன்னார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘நீர் சொன்னது பொய்; அல்லாஹ்வின் பகைவரே!” என்று கூறினார்கள். பிறகு, அந்த யூதர்களை உமர் (ரலி) அவர்கள் நாடு கடத்திவிட்டார்கள். அவர்களுக்குச் சேர வேண்டிய விளைச்சலின் விலையைப் பணமாகவும், ஒட்டகமாகவும், ஒட்டகச் சேணங்கள், கயிறுகள் போன்ற பொருட்களாகவும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் குறித்த தகவல் சுருக்கமாகவே காணப்படுகிறது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2730
- Book Index
- 18
Grades
- -