ஹதீஸ்கள்
#2728
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ‘‘இறைத்தூதரான மூசா (அலை) அவர்கள்” என்று தொடங்கி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மூசா (அலை) அவர்கள் தொடர்பாகக்) கூறிய முழு ஹதீஸையும் சொல்லத் தொடங்கினார்கள்: களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று உங்களிடம் நான் கூற வில்லையா?” என்று (மூசா (அலை) அவர்களை நோக்கிக்) கேட்டார்கள் (18:72). (மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களின் நடவடிக்கைகளை ஆட்சே பித்து) முதல் முறையாகக் கேட்டது மறதியால் கேட்டதாகும்; நடுவில் சொன்னது அவர் விதித்த நிபந்தனையாகும்; மூன்றாவது முறை கேட்டது, வேண்டுமென்றே செய்ததாகும்.14 (இது தொடர்பான இறைவசனங்கள் வருமாறு:) நான் மறந்துபோனதற்காக என்னை (திரும்பிப்போகச் சொல்லி)த் தண்டித்து விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள். (18:73) பிறகு இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தார்கள்; அப்போது, அவர் (களிர்) அவனைக் கொன்றுவிட்டார். (18:74) மேலும், அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள்... அங்கே கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டார்கள். உடனே அவர் (களிர்), அதைச் செப்பனிட்டு நிறுத்தி வைத்தார். (18:77) ‘‘அவர்களுக்கப்பால் (வராஅஹும்) ஓர் அரசன் இருந்தான்” (18:79) என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘‘அவர்களுக்கு முன்னால் (அமாமஹும்) ஓர் அரசன் இருந்தான்” என்று வாசித்துள்ளார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2728
- Book Index
- 16
Grades
- -