ஹதீஸ்கள்
#2713
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த) அப்பெண்களை இறைவசனத்தின் (60:10லி12) கட்டளைப்படி சோதனை செய்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்த னையை அப்பெண்களில் எவர் ஏற்றுக் கொள்கிறாரோ அவரிடம், ‘‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். இப்படி, அப்பெண்ணிடம் பேசத்தான் செய்வார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் கரம் விசுவாசப் பிரமாணம் பெறும்போது எந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை. பெண்களிடம் அவர்கள் வாய்மொழியாகவே விசுவாசப் பிரமாணம் வாங்கினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2713
- Book Index
- 2
Grades
- -