ஹதீஸ்கள்
#2688
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் செய்ய விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் யாருடைய பெயர் வருகிறதோ அவர் நபி (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்படுவார். நபி (ஸல்) அவர்கள் (தம்) துணைவியரில் ஒவ்வொருவருக்கும் தமது இரவையும் பகலையும் பங்கிட்டிருந்தார்கள். (ஆனால், நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தமது பகலையும் இரவையும் எனக்குப் பரிசளித்துவிட்டார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பை (பெற) விரும்பியே அவர்கள் இப்படிச் செய்தார்கள். இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2688
- Book Index
- 49
Grades
- -