ஹதீஸ்கள்
#2687
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
காரிஜா பின் ஸைத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவரான உம்முல் அலா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தார்.34 அவர் என்னிடம் தெரிவித்ததாவது: (மக்கா முஸ்லிம்களான) யிமுஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்கவைப்பது’ என்பதை அறிய அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது (எங்கள் வீடு) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர் களின் பங்கில் வந்தது. ஆகவே, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்களிடம் தங்கினார்கள். அவருக்கு நோய் ஏற்பட்ட போது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் இறந்த போது, அவரை அவரது துணிகளில் வைத்து (கஃபனிட்டு)விட்டோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் பின் மழ்வூனை நோக்கி), ‘‘அபூசாயிபே! உங்கள்மீது இறையருள் உண்டாவதாக! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தெரியாது. என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கு நன்மையையே எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவரிடம் எப்படி நடந்துகொள்ளப்படும் (மறுமையில் அவரது நிலை என்னவாகும்?)› என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் ‘‘அது அவருடைய (நற்)செயல்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2687
- Book Index
- 48
Grades
- -