ஹதீஸ்கள்
#2664
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுத் போர் நடந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதி யளிக்கவில்லை. அகழ்ப் போரின்போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத் தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள். அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர் (ரலி) அவர்களுடைய) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், ‘‘(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக்காட்டும்) எல்லைக் கோடாகும்” என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (இராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2664
- Book Index
- 28
Grades
- -