ஹதீஸ்கள்
#2662
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்குக் கேடுதான்; உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘‘உங்களில் எவர் தம் சகோதர ரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருக் கிறாரோ அவர், ‘‘இன்ன மனிதரை நான் (இவ்வாறு) எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரை விசாரணை செய்பவன். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2662
- Book Index
- 26
Grades
- -