ஹதீஸ்கள்
#2661
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது என்ப தைத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் யாரது (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல் வார்கள். இவ்வாறே, அவர்கள் மேற்கொண்ட ஓர் அறப்போரின்போது,20 (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக் கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்ற மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் தேவையை நான் முடித்துக்கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது (தற்செயலாக) என் நெஞ்சை நான் தொட்டுப்பார்த்தேன்; (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக்கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது. ஆகவே, எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் (வைத்துக்) கட்டுவோர், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் பயணம் செய்யும் என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிவைத்து ஏற்றியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம்பெண்ணாகவும் இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்றபிறகு (தொலைந்துபோன) என் கழுத்து மாலை எனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கெனவே தங்கியிருந்த இடத்தை நாடிச் சென்றேன். படையினர், நான் காணாமல்போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்தபொழுது என் கண்களில் (உறக்கம்) மேலிட நான் தூங்கிவிட்டேன். ஸஃப்வான் பின் அல்முஅத்தல் அஸ்ஸுலமீ என்பவர், (படையினர் முகாமிட்டிருந்த இடத்தில் தவறவிட்டுச்சென்ற பொருட்களை எடுப்பதற்காகப்) படையினர் சென்றபின் தங்குவார். அவர், நான் தங்கியிருந்த இடத்திற்கு காலையில் வந்துசேர்ந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் தெரிந்துகொண்டு) அவர், ‘‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்)” என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச்செய்து, அதன் முன்னங்காலை (தமது காலால்) மிதித்துக்கொள்ள நான் அதன் மீது ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நண்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்டிருந் தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார் கள். என்மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லில் மூழ்கிப்போயிருந் தார்கள். நான் நோயுறும்போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காண முடியாமல்போனது, எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, ‘‘நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள்; (பிறகு போய்விடுவார்கள்.) அவ்வளவுதான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டுவந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து) குணமடைந்துவிட, நானும் உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும், நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திவந்த யிமனாஸிஉ’ எனுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டுமே இவ்வாறு செல் வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்றுகொண்டிருந்தோம். எங்களின் இந்த வழக்கம் வனாந்திரங் களில் வசித்துவந்த பண்டைய அரபியரின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்றுகொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹ், தாம் அணிந்திருந்த கம்பளி அங்கியில் இடறிக்கொண்டார். அப்போது அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று கூறி னார். நான், ‘‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். நான் ‘‘என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படி யொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என்மீதான அவதூறு) செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம், ‘‘மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், ‘‘என் அன்பு மகளே! உன்மீது இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திக்கொள்ளாதே. அல்லாஹ் வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தம்) கணவரிடம் பிரியத்துக் குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளு டைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவே யாகும்” என்று கூறினார்கள். நான், ‘‘சுப்ஹானல்லாஹ்...! (இறைவன் தூயவன்!) இப்படியா மக்கள் பேசிக்கொள் கிறார்கள்?” என்று கேட்டேன். அன்றிரவு விடிய விடிய எனக்குக் கண்ணீர் நிற்க வில்லை; தூக்கம் (கண்களைத்) தழுவ வில்லை. காலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத் தார்கள். அப்போது வேத அறிவிப்பு (வஹீ) தாமதமாயிற்று. உசாமா (ரலி) அவர்களோ, தமது உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் துணைவியர்மீதிருந்த பாசத்தை அடிப் படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியார்! அல்லாஹ்வின் மீதாணையாக! நல்லதைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றி மனைவியர் பலர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, ‘‘பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), ‘‘தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப்போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார். உடனே அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரி (பின்வருமாறு பேசி)னார்கள்: என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவி புரிபவர் யார்? அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் நான் இருக்கும்போது தவிர (வேறு நேரங்களில்) வந்ததில்லை. உடனே (அன்சாரிகளில் ‘அவ்ஸ்’ கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனைத் தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) ‘அவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனது கழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான யிகஸ்ரஜ்’ குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந் தார் லிஇவர் முன்பு நல்ல மனிதராகத்தான் இருந்தார். எனினும், குல மாச்சரியம் அவரைத் தூண்டிவிடலி (சஅத் பின் முஆதை நோக்கி), ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது” என்று கூறினார். உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, உபாதா (ரலி) அவர்களை நோக்கி, ‘‘நீர்தான் பெய்யுரைத் தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்று கொண்டி ருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கி, அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமாகிவிட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அன்றைய நாள் முழுவதும் நான் அழுதுகொண்டேயிருந்தேன்; என் கண்ணீரும் ஓயவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலையில் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்துவிடுமோ என்றெண்ணும் அளவுக்கு அழுதிருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, நான் அழுதுகொண்டிருந்தபோது, அன்சாரிப் பெண் ஒருவர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவரும் அழுதபடி அமர்ந்துகொண்டார். நாங்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக் கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலி ருந்து அவர்கள் என்னருகே அமர்ந்த தில்லை. ஒரு மாத காலம்வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு யிவஹீ’யாக அருளப்படவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை)” என்று கூறிவிட்டு, ‘‘ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் பாவமீட்பு பெற்றுக்கொள். ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருப்பதாக நான் கருதவில்லை. நான் என் தந்தையிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என் சார்பாகப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு என் சார்பாகப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நானோ வயது குறைந்த இளம்பெண்; குர்ஆனிலிருந்து அதிகம் தெரியாதவள். ஆகவே, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட வற்றை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்துபோய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால் லிநான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்லி நீங்கள் அதை நம்பப்போவ தில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால் லிநான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்லி (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக் கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை (யஃகூப் (அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்” (குர்ஆன், 12:18) என்று கூறினேன்.21 பிறகு படுக்கையில் திரும்பிப் படுத்துக்கொண்டேன். அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்று நம்பினேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! என் தொடர்பாக அல்லாஹ் வேத அறிவிப்பு (வஹீ) அருள்வான் என நான் எண்ணவில்லை. குர்ஆனில் என் தொடர்பாகப் பேசப்படும் அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய எனது எண்ணமாகும். மாறாக, நான் குற்றமற்றவள் என்று காட்டும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்தேன். அல்லாஹ் வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப் பெற்றுவிட்டது. உடனே (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துகளைப் போன்று வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டு நீங்கியவுடன் (மகிழ்ச்சியோடு) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை, ‘யிஆயிஷா! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்” என்று என்னிடம் கூறியதுதான். என் தாயார், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து செல்” என்று கூறினார்கள். நான், ‘‘மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களி டம் நான் செல்லமாட்டேன். அல்லாஹ் வைத் தவிர வேறு யாரையும் நான் புகழவுமாட்டேன்” என்றேன். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பிய வர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் பத்து வசனங்களை (24:11லி20) அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிடமாட்டேன்” என்று கூறினார்கள். லிமிஸ்தஹ் பின் உஸாஸா தம் உற வினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்லி உடனே உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘உங்களில் செல்வமும் தயாள குணமும் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ எதுவும் வழங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்ய வேண்டாம்” என்று தொடங்கி, ‘‘அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவதை நீங்கள் விரும்பமாட்டீர்களா...” (24:22) என்பதுவரையிலான வசனத்தை அருளி னான். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு முன்பு தாம் செய்துவந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள். (குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தொடர்பாக (தமது இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள். ‘‘ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின்மேல் பழிபோடாமல்) நான் பாதுகாத்துக்கொள்கிறேன்.22 அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று பதிலளித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள்தான் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அவரை அல்லாஹ் (இறையச்சமுடைய,) தார்மீகப் பண்புகளில் பாதுகாத்திருந்தான்.23 இந்த ஹதீஸ் மொத்தம் பத்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தம் அறிவிப்புகளில் கூறுகிறார்கள்: என்னிடம் உர்வா, சயீத், அல்கமா, உபைதுல்லாஹ் (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறிய வர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷாவை அல்லாஹ் தூய்மைப்படுத்தியது பற்றியும் தெரிவித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இச்சம்பவத் தில் ஆளுக்கொரு பகுதியை எனக்கு அறிவித்தார்கள். சிலர் சிலரைவிட நன்கு ம”மிட்டும் சம்பவத்தை உறுதியான முறையிலும் கூறினர். அவர்கள் ஒவ்வொருவரும் அறிவித்ததை நான் ம”மிட்டுள்ளேன். ஒருவரது அறிவிப்பு மற்றவரின் அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2661
- Book Index
- 25
Grades
- -