ஹதீஸ்கள்
#2660
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன். (இந்நிலையில்) வேறொரு பெண் வந்து, ‘‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும், உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கி றேன்” என்று கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்: (அவர்களிடம் இது பற்றிக் கேட்டதற்கு), ‘‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால் குடித்ததாகக்) கூறப்பட்டுவிட்ட பிறகு எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்துவிடு” என்றோ அது போன்றதையோ கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن عمر بن سعيد، عن ابن ابي مليكة، عن عقبة بن الحارث، قال تزوجت امراة فجاءت امراة فقالت اني قد ارضعتكما. فاتيت النبي صلى الله عليه وسلم فقال " وكيف وقد قيل دعها عنك " او نحوه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2660
- Book Index
- 24
Grades
- -
