ஹதீஸ்கள்
#2659
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உம்மு யஹ்யா பின்த் அபீஇஹாபை மணந்துகொண்டேன். (இந்நிலையில்) ஒரு கறுப்பு நிற அடிமைப் பெண் வந்து, ‘‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்” என்று கூறினாள். இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (முகம் திருப்பிக்கொண்டு) என்னை அலட்சியம் செய்தார்கள். நான் என் இருப்பிடத்திலிருந்து விலகி (அவர்களின் முகம் இருக்கும் பக்கம்) சென்று அவர்களிடம் அதை (திரும்ப)க் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டி யிருப்பதாகச் சொல்லும்போது எப்படி (நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடியும்)?” என்று கேட்டார்கள்; என்னை அவளுடன் சேர்ந்து வாழக் கூடாதென்று விலக்கினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن ابن جريج، عن ابن ابي مليكة، عن عقبة بن الحارث،. وحدثنا علي بن عبد الله، حدثنا يحيى بن سعيد، عن ابن جريج، قال سمعت ابن ابي مليكة، قال حدثني عقبة بن الحارث، او سمعته منه، انه تزوج ام يحيى بنت ابي اهاب قال فجاءت امة سوداء فقالت قد ارضعتكما. فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فاعرض عني، قال فتنحيت فذكرت ذلك له قال " وكيف وقد زعمت ان قد ارضعتكما ". فنهاه عنها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2659
- Book Index
- 23
Grades
- -
