ஹதீஸ்கள்
#2634
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக்கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். ‘‘இது யாருடைய நிலம்?” என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், ‘‘இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாட கையை (குத்தகையை) அவர் பெற்றுக் கொள்வதைவிட குத்தகைக்கு எடுத்த வருக்கு (அவர் அதை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி) இரவலாக (மனீஹா) கொடுத்துவிட்டிருந்தால், அவருக்கு (நில உரிமையாளருக்கு) அது நன்மையானதாக இருந்திருக்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب، حدثنا ايوب، عن عمرو، عن طاوس، قال حدثني اعلمهم، بذاك يعني ابن عباس رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم خرج الى ارض تهتز زرعا فقال " لمن هذه ". فقالوا اكتراها فلان. فقال " اما انه لو منحها اياه كان خيرا له من ان ياخذ عليها اجرا معلوما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2634
- Book Index
- 66
Grades
- -
