ஹதீஸ்கள்
#2633
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் கிராமவாசி ஒருவர் வந்து புலம் பெயர்தல் (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘யிஉனக்குக் கேடுதான்! ஹிஜ்ரத் செய்வது ஒரு கடினமான காரியம். உன்னிடம் ஒட்டகம் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம்” என்று கூறினார். ‘‘அதற்கு நீ ஸகாத் கொடுக்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘ஆம், (கொடுக்கிறேன்)” என்று பதிலளித்தார். ‘‘(அதன் பாலைப் பிறர் உபயோகித்துக்கொள்ள) அதை இரவலாக (மனீஹாவாக) கொடுக்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘ஆம் (கொடுக்கிறேன்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது நீர் அருந்தும் முறைவரும் நாளில் அதனிடம் பால் கற(ந்து ஏழைகளுக்குக் கொடு)க்கின்றாயா?” என்று கேட்க அவர், ‘யிஆம்” என்று பதிலளித்தார். ‘‘அப்படி யாயின், ஊர்களுக்கு அப்பால் சென்று (கூட) நீ நற்செயல் புரியலாம். ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்” என்று கூறினார்கள்.32 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2633
- Book Index
- 65
Grades
- -