ஹதீஸ்கள்
#2631
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நற்செயல்கள் நாற்பது உள்ளன. அவற் றில் ஒன்றை, அதன் நன்மையை எதிர் பார்த்தும், அதற்கென வாக்களிக்கப் பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் செய்துவந்தால், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க் கத்தில் அனுமதிக்காமல் இருப்பதில்லை. அவற்றில் மிக உயர்ந்தது, பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் ஹஸ்ஸான் பின் அ(த்)திய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவது நீங்கலாக (மற்ற நற்செயல்களை) நாங்கள் கணக்கெடுத்துப் பார்த்ததில், முகமனுக்கு (சலாமுக்கு) பதில் சொல்வது, தும்மியவருக்காகப் பிரார்த்திப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது முதலியவற்றை நாங்கள் கண்டோம். ஆனால், இவ்வாறு பதினைந்து நற்செயல்களைக் கூட எங்களால் கணக்கில் காட்ட முடியவில்லை. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عيسى بن يونس، حدثنا الاوزاعي، عن حسان بن عطية، عن ابي كبشة السلولي، سمعت عبد الله بن عمرو رضى الله عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم " اربعون خصلة اعلاهن منيحة العنز، ما من عامل يعمل بخصلة منها رجاء ثوابها وتصديق موعودها الا ادخله الله بها الجنة ". قال حسان فعددنا ما دون منيحة العنز من رد السلام، وتشميت العاطس، واماطة الاذى عن الطريق ونحوه، فما استطعنا ان نبلغ خمس عشرة خصلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2631
- Book Index
- 63
Grades
- -
