ஹதீஸ்கள்
#2612
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், பள்ளிவாசலின் நுழைவாயில் அருகே (விற்கப்பட்ட) பட்டு அங்கியைக் கண்டார் கள். எனவே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் வாங்கி, வெள்ளிக்கிழமை யிலும் தூதுக் குழுக்கள் உங்களைச் சந்திக்க வரும்போதும் அணிந்துகொண் டால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்” என்று கூறினார்கள். பிறகு சில பட்டு அங்கிகள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) வந்தன. அவற்றில் ஓர் அங்கியை அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘எனக்கு இதை அணிந்துகொள்ளக் கொடுக்கிறீர்களா? யிஉ(த்)தாரிக்’ அங்கி தொடர்பாக நீங்கள் முன்பு ஒரு விதமாகச் சொன்னீர்களே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக நான் உங்களுக்குத் தரவில்லை” என்று பதிலளித்தார்கள்.23 ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் (பால்குடி) சகோதரர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2612
- Book Index
- 45
Grades
- -