ஹதீஸ்கள்
#2606
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (அவர் நபி (ஸல்) அவர்களிடம் கடுமையாகப் பேசியதால்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்த மனிதரைத் தண்டிக்க முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு” என்று கூறிவிட்டு, ‘‘அவருக்கு (நான் தரவேண்டிய ஒட்டகத்தின்) சம வயதுடைய ஒட்டகத்தை வாங்கி, அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள், ‘‘தாங்கள் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் யார் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن عثمان بن جبلة، قال اخبرني ابي، عن شعبة، عن سلمة، قال سمعت ابا سلمة، عن ابي هريرة رضى الله عنه قال كان لرجل على رسول الله صلى الله عليه وسلم دين فهم به اصحابه، فقال " دعوه فان لصاحب الحق مقالا. وقال اشتروا له سنا فاعطوها اياه ". فقالوا انا لا نجد سنا الا سنا هي افضل من سنه. قال " فاشتروها فاعطوها اياه، فان من خيركم احسنكم قضاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2606
- Book Index
- 40
Grades
- -
