ஹதீஸ்கள்
#2605
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது; அப்போது அவர்களின் வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் அவர்களின் இடப் பக்கத்தில் முதியவர்கள் சிலரும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சிறுவரை நோக்கி, ‘‘இவர்களுக்கு (இந்தப் பாலைக்) கொடுப்பதற்கு எனக்கு அனுமதி தரு கிறாயா?” என்று கேட்டார்கள். அச்சிறுவர், ‘‘மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக்கூடிய (நற்)பேற்றை வேறெ வருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்தப் பானத்தைச் சிறுவரின் கையிலேயே வைத்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2605
- Book Index
- 39
Grades
- -