ஹதீஸ்கள்
#2602
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் இடப் பக்கத்தில் முதியவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (இந்த முதியவர்களுக்கு) இதைக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். அந்தச் சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக்கூடிய) என் பங்கை வேறெவருக்காகவும் விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி) பானத்தை வைத்தார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن قزعة، حدثنا مالك، عن ابي حازم، عن سهل بن سعد رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم اتي بشراب فشرب، وعن يمينه غلام وعن يساره الاشياخ فقال للغلام " ان اذنت لي اعطيت هولاء ". فقال ما كنت لاوثر بنصيبي منك يا رسول الله احدا. فتله في يده
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2602
- Book Index
- 36
Grades
- -
