ஹதீஸ்கள்
#2598
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘பஹ்ரைனின் நிதி வந்துவிட்டால் உனக்கு இவ்வளவு (இவ்வளவு) தருவேன்” என்று மூன்று முறை கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அந்த நிதி வந்து சேரவில்லை. பிறகு (ஆட்சித் தலைவரான) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாக்களித்திருந்தால், அல்லது எவருக்காவது அவர்கள் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்” என்று (பொது) அறிவிப்புச் செய்யும்படி பொதுஅறிவிப்பாளருக்குக் கட்டளையிட, அவர் அவ்வாறே அறிவித்தார். ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘எனக்கு (பஹ்ரைனின் நிதியிலிருந்து) தருவதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். இதைக் கேட்ட அவர்கள், எனக்கு (நிதியை) மூன்று முறை கைகளால் அள்ளிக் கொடுத்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2598
- Book Index
- 32
Grades
- -