ஹதீஸ்கள்
#2597
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை ஸகாத் வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் யிஇப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப் பட்டுவந்தார். அவர் (ஸகாத் வசூலித் துக்கொண்டு) வந்தபோது, ‘‘இது உங்களுக் குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா, இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் (அதில்) ஒன்றை (முறைகேடாக)ப் பெற்றிருந்தால், அதை அவர் தமது பிடரியில் சுமந்துகொண்டு மறுமை நாளன்று வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் அக் குள்களின் வெண்மையை நாங்கள் பார்க் கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, ‘‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2597
- Book Index
- 31
Grades
- -