ஹதீஸ்கள்
#2572
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்துவிட்டார் கள். நான் அதைப் பின்தொடர்ந்து சென்று பிடித்துவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை லிஅல்லது தொடைகளைலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ‘‘அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா?” என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கேட்க, ‘‘(ஆம்,) நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள்” என்று ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, அதன் பிறகு, ‘‘அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” என்று கூறினார். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن هشام بن زيد بن انس بن مالك، عن انس رضى الله عنه قال انفجنا ارنبا بمر الظهران، فسعى القوم فلغبوا، فادركتها فاخذتها، فاتيت بها ابا طلحة فذبحها، وبعث بها الى رسول الله صلى الله عليه وسلم بوركها او فخذيها قال فخذيها لا شك فيه فقبله. قلت واكل منه قال واكل منه. ثم قال بعد قبله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2572
- Book Index
- 7
Grades
- -
