ஹதீஸ்கள்
#2571
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களின் இந்த வீட்டிற்கு வந்தார்கள். (எங்களிடம்) அருந்துவதற்கு ஏதேனும் கேட்டார்கள். ஆகவே, நாங்கள் எங்களின் ஓர் ஆட்டிலிருந்து அவர்களுக்காகப் பால் கறந்தோம். பிறகு, நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்குக் கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும், எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந் தனர். நபி (ஸல்) அவர்கள் (பாலைக் குடித்து) முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள், ‘‘இதோ, அபூபக்ர்” என்று கூறினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் தாம் அருந்தியதன் மீதியைக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு ‘‘வலப் பக்கத்தி லிருப்பவர்களே முன்னுரிமையுடைவர்கள். ஆகவே, வலப் பக்கத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள்” என்று கூறி னார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள், ‘அது நபிவழியாகும், அது நபிவழியாகும்’ என்று மும்முறை கூறினார்கள் என இதை அவர்களிடமிருந்து கேட்டு அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2571
- Book Index
- 6
Grades
- -