ஹதீஸ்கள்
#2569
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர் (மக்கா) பெண்மணி ஒருவரி டம் தச்சு வேலை தெரிந்த அடிமை ஒருவர் இருந்தார். அப்பெண்மணியிடம் நபி (ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி, ‘‘சொற்பொழிவு மேடைக்கு வேண்டிய மரச் சட்டங்களைச் செய்து தரும்படி உன் அடிமைக்குக் கட்டளையிடு” என்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே, அப் பெண்மணி தன் அடிமைக்குக் கட்டளையிட, அவ்வடிமை (காட்டிற்குச்) சென்று, சவுக்கு மரத்தை வெட்டியெடுத்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சொற்பொழிவு மேடை ஒன்றைச் செய்தார். அதைச் செய்து முடித்தபின் அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு, அவர் அதைச் செய்து முடித்துவிட்டதாகத் தகவல் சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அதைத் தமக்குக் கொடுத்தனுப்புமாறு சொன்னார்கள். பின்னர் அதைக் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் அதைச் சுமந்து சென்று இப்போது நீங்கள் பார்க்கும் இடத்தில் வைத்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابن ابي مريم، حدثنا ابو غسان، قال حدثني ابو حازم، عن سهل رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم ارسل الى امراة من المهاجرين، وكان لها غلام نجار قال لها " مري عبدك فليعمل لنا اعواد المنبر ". فامرت عبدها، فذهب فقطع من الطرفاء، فصنع له منبرا، فلما قضاه ارسلت الى النبي صلى الله عليه وسلم انه قد قضاه، قال صلى الله عليه وسلم " ارسلي به الى ". فجاءوا به فاحتمله النبي صلى الله عليه وسلم فوضعه حيث ترون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2569
- Book Index
- 4
Grades
- -
