ஹதீஸ்கள்
#2567
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் உறுதியாகப் பிறை பார்ப்போம்; மீண்டும் (அடுத்த) பிறை பார்ப்போம்; பிறகும் (அடுத்த) பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்திருப்போம்.2 அப்படி யிருந்தும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப் பட்டிராது” என்று கூறினார்கள். நான், ‘‘என் சிற்றன்னையே! நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இரு கறுப்புப் பொருட்களான பேரீச்சம் பழமும் தண்ணீரும்தான் (எங்கள் உணவு). தவிரவும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹா) இருந்தன. அவர்கள் (அவற்றி லிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2567
- Book Index
- 2
Grades
- -