ஹதீஸ்கள்
#2564
ஸஹீஹ் அல்-புகாரீ - Contract of Manumission
அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பரீரா (ரலி) அவர்கள், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தமது விடுதலைப் பத்திரத் தொகையைச் செலுத்தும் விஷயத்தில்) உதவி கேட்டு வந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நான் உன் உரிமையாளர்களுக்கு உன் விலையை ஒரே தடவையில் கொடுத்துவிடுகிறேன். பிறகு உன்னை விடுதலை செய்துவிடுகிறேன். இதை அவர்கள் விரும்பினால் அவ்வாறே செய்(யத் தயாராக இருக்)கி றேன்” என்று கூறினார்கள். (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த விருப்பத்தை பரீரா (ரலி) தம் உரிமையாளர்களிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள், ‘‘(உனது) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருந்தால் தவிர, நாங்கள் இதற்குச் சம்மதிக்கமாட்டோம்” என்று கூறிவிட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن يحيى بن سعيد، عن عمرة بنت عبد الرحمن، ان بريرة، جاءت تستعين عايشة ام المومنين رضى الله عنها فقالت لها ان احب اهلك ان اصب لهم ثمنك صبة واحدة فاعتقك فعلت. فذكرت بريرة ذلك لاهلها، فقالوا لا. الا ان يكون ولاوك لنا. قال مالك قال يحيى فزعمت عمرة ان عايشة ذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال " اشتريها واعتقيها، فانما الولاء لمن اعتق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Contract of Manumission
- Hadith Index
- #2564
- Book Index
- 5
Grades
- -
