ஹதீஸ்கள்
#2562
ஸஹீஹ் அல்-புகாரீ - Contract of Manumission
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், விடுதலை செய்வதற்காக ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்க விரும்பினார்கள். அப்போது அப்பெண்ணின் உரிமையாளர்கள், ‘அவரது வாரிசுரிமை எங்களுக்கே உரியது’ என்னும் நிபந்தனையின் பேரில்தான் நாங்கள் அவரை விற்போம் என்று கூறினார்கள். (இதை அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களுடைய இந்த நிபந்தனை உனக்குத் தடை ஆகாது. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (விடுதலை செய்யப்பட்ட அடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما قال ارادت عايشة ام المومنين ان تشتري جارية لتعتقها، فقال اهلها على ان ولاءها لنا. قال رسول الله صلى الله عليه وسلم " لا يمنعك ذلك، فانما الولاء لمن اعتق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Contract of Manumission
- Hadith Index
- #2562
- Book Index
- 3
Grades
- -
