ஹதீஸ்கள்
#2541
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
அப்துல்லாஹ் பின் அவ்ன் அல்முஸ்னீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டி ருந்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் யிபனூ முஸ்தலிக்’ குலத்தார் பாராமுகமாக இருந்தபோது, அவர்கள்மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக்கொண்டிருந்தன. அவர் களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களுடைய மக்களை (பெண்கள், பிள்ளைகுட்டிகளை) போர்க் கைதிகளாக சிறைபிடித்தார்கள்; அன்று தான் ஜுவைரிய்யா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்.21 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2541
- Book Index
- 24
Grades
- -