ஹதீஸ்கள்
#2536
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்கினேன். அப்போது அவருடைய உரிமையாளர்கள், அவருக்கு வாரிசாகும் உரிமை தமக்கே உரியதாக இருக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார்கள். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘‘அவளை விடுதலை செய்துவிடு! ஏனெனில், விலையைக் கொடுப்பவருக்கே (விடுதலை செய்பவருக்கே) வாரிசாகும் உரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள். நான் அவரை விடுதலை செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவருடைய கணவர் விஷயத் தில் (அவருடன் வாழ்வது, அல்லது பிரிந்துவிடுவது ஆகிய இரண்டில்) எதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கினார்கள். அதற்கு பரீரா, ‘‘அவர் எனக்கு எவ்வளவுதான் (கொட்டிக்) கொடுத்தாலும் அவரிடம் நான் இருக்கமாட்டேன்” என்று கூறி, (கணவனைப் பிரிந்து) தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة رضى الله عنها قالت اشتريت بريرة فاشترط اهلها ولاءها، فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال " اعتقيها، فان الولاء لمن اعطى الورق ". فاعتقتها، فدعاها النبي صلى الله عليه وسلم فخيرها من زوجها فقالت لو اعطاني كذا وكذا ما ثبت عنده. فاختارت نفسها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2536
- Book Index
- 20
Grades
- -
