ஹதீஸ்கள்
#2531
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவிற்கு) நபி (ஸல்) அவர்களைக் காணவந்தபோது பாதையில், எவ்வளவு நீண்ட களைப்பூட்டும் இரவு! இருந்தாலும் காத்தது அந்த இரவுதான்! இறைமறுப்பு இல்லத்திலிருந்து! என்று பாடினேன். வழியில் என் அடிமை ஒருவன் என்னை விட்டுத் தப்பி யோடிவிட்டான். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்களிடம் நான் (இஸ்லாத்திற்கான) உறுதிமொழியளித்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தபோது அந்த (என்) அடிமை தென்பட்டான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அபூஹுரைரா! இதோ உங்கள் அடிமை!” என்று கூறி னார்கள். நான், ‘‘அவன் (இன்று முதல்) சுதந்திரமானவன்; அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக” என்று கூறி, அவனை விடுதலை செய்துவிட்டேன். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகின்றேன்: இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிசுதந்திரமானவன்’ எனும் சொல் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
حدثنا عبيد الله بن سعيد، حدثنا ابو اسامة، حدثنا اسماعيل، عن قيس، عن ابي هريرة رضى الله عنه قال لما قدمت على النبي صلى الله عليه وسلم قلت في الطريق يا ليلة من طولها وعنايها على انها من دارة الكفر نجت قال وابق مني غلام لي في الطريق قال فلما قدمت على النبي صلى الله عليه وسلم بايعته، فبينا انا عنده اذ طلع الغلام، فقال لي رسول الله صلى الله عليه وسلم " يا ابا هريرة، هذا غلامك ". فقلت هو حر لوجه الله. فاعتقته. لم يقل ابو كريب عن ابي اسامة حر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2531
- Book Index
- 15
Grades
- -
